இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில், (2002- 2012) ஆண்டுகளில் பல்வேறு வனப்பகுதிகளில் மனிதர்களால் வேட்டையாடப்படுதல், வாகன விபத்துக்கள், உடல்நலக்குறைவு, வயோதிகம், மின்சாரம் தாக்கியது, பட்டினி உள்ளிட்ட காரணங்களால் 335 புலிகள் பலியாகியுள்ளன.
இவற்றில் அதிகபட்சமாக கடந்த 2009-ம் ஆண்டு 58 புலிகள் பலியாகியுள்ளன. தொடர்ந்து 2002-ம் ஆண்டு 9, 2003-ம் ஆண்டு 16, 2005-ம் ஆண்டு 17, 2006-ம் ஆண்டு 5, 2007-ம் ஆண்டு 6, 2008-ம் ஆண்டு 36, 2010-ம் ஆண்டு 14, 2011-ம் 13 என 335-க்கும் மேற்பட்ட புலிகள் இறந்துள்ளன.
இவற்றில் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு 68 புலிகள் இறந்துள்ளன. இவ்வாறு கடந்த 10 ஆண்டுளில் இறந்த புலிகளின் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தேசிய புலிகள் காப்பக ஆணையம் வெளியிட்டுள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.