நாடும் நடப்பும் | த‌மிழக‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » 10 ஆண்டுகளில் 335 புலிகள் பலியாகியுள்ளது (Over 335 Tigers Died in Last 10 Years: rti)
கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 335 புலிகள் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக என்.டி.சி.ஏ.அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில், (2002- 2012) ஆண்டுகளில் பல்வேறு வனப்பகுதிகளில் மனிதர்களால் வேட்டையாடப்படுதல், வாகன விபத்துக்கள், உடல்நலக்குறைவு, வயோதிகம், மின்சாரம் தாக்கியது, பட்டினி உள்ளிட்ட காரணங்களால் 335 புலிகள் பலியாகியுள்ளன.

இவற்றில் அதிகபட்சமாக கடந்த 2009-ம் ஆண்டு 58 புலிகள் பலியாகியுள்ளன. தொடர்ந்து 2002-ம் ஆண்டு 9, 2003-ம் ஆண்டு 16, 2005-ம் ஆண்டு 17, 2006-ம் ஆண்டு 5, 2007-ம் ஆண்டு 6, 2008-ம் ஆண்டு 36, 2010-ம் ஆண்டு 14, 2011-ம் 13 என 335-க்கும் மேற்பட்ட புலிகள் இறந்துள்ளன.

இவற்றில் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு 68 புலிகள் இறந்துள்ளன. இவ்வாறு கடந்த 10 ஆண்டுளில் இறந்த புலிகளின் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தேசிய புலிகள் காப்பக ஆணையம் வெளியிட்டுள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Feedback Print