தாக்கியதில் உயிரிழந்த 3 மாதக் குழந்தையைக் கொன்ற தந்தை உமர் பரூக்கை, மத்திய சிறையில் இருக்கும் மற்றக் கைதிகள் தாக்கினர். இதனால் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
பெங்களூர் குஷால்நகரைச் சேர்ந்த உமர் பாரூக் என்பவருக்கு பெண் குழந்தையாக அஃப்ரீன் பிறந்ததால் அதன் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மனைவி ரேஷ்மா வெளியே சென்றிருந்தபோது பெண் குழந்தை அஃப்ரீனை உமர் சிகரெட்டால் சூடு வைத்தும், அடித்தும் துன்புறுத்தினார்.
இதில் ரத்த வாந்தியும், மூச்சு திணறுலும் ஏற்பட்டு உயிருக்கு போராடிய குழந்தையை வாணிவிலாஸ் மருத்துவமனையில் தாய் ரேஷ்மா சேர்த்தார். மூன்று மாத குழந்தை அஃப்ரீனை குணமாக்க மருத்துவர்கள் தீவிர முயற்சி மேகொண்டனர். எனினும் பல்வேறு உடல்நலக் குறைவுகளால் இன்று காலை அதற்கு மாரடைப்பு ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்தவழக்கில் கைது செய்யப்பட உமர் பாரூக் பெங்களூரூ மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் மற்றக் கைதிகள் உமர் பாரூக்கை தாக்கினர். மேலும் அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு அவனை தனிச் சிறையில் அவனை அடைத்தனர்.