வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2016 (14:24 IST)

உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் வேட்பு மனு தாக்கல்

உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.


 

 
2006ஆம் ஆண்டு விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அதிமுகவின் கூட்டணி வேட்பாளராக ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
வருகிற 16ஆம் தேதி நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலில் அவர் உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை இன்று மதியம் 1.30 மணிக்கு அவர் தாக்கல் செய்தார்.
 
அவருடன் அவருடைய மனைவி, மைத்துனர் சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். தேர்தல் அலுவலரான முகுந்தனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.