வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (17:28 IST)

அம்பானிக்கு மட்டும் எங்கயோ மச்சம் இருக்குயா... எகிறிய மார்கெட் வேல்யு!!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் தற்போது அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்து 1555 கோடியாக உயர்ந்துள்ளது.
 
ரிலையன்ஸ் எண்ணை சுத்திகரிப்பு ஆலை, ரிலையன்ஸ் கியாஸ் ஆலை, ரிலையன்ஸ் ஜியோ என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் அம்பானியின் சொத்து மத்து வாயை பிளக்க வைத்துள்ளது. 
 
ஆம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு படி 1 பங்கின் விலை ரூ. 1579.95 காசாக உயர்ந்தது. இந்த பங்கு விலை உயர்வை வைத்து கணக்கிடும் போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்து 1555 கோடியாக உயர்ந்துள்ளது. 
 
இந்தியாவில் வேறு எந்த தனிப்பட்ட நிறுவனமும் ரூ.10 லட்சம் சொத்து மதிப்பை இதுவரை எட்டியது இல்லை. இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருக்கின்ற நிலையில் முகேஷ் அம்பானியின் நிறுவனம் மட்டும் வளர்ச்சியை கண்டு வருவது ஆச்சரியமாக இருக்கிறது.