வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2016 (11:33 IST)

உடுமலை படுகொலை: சிகிச்சைக்கு பின் கணவர் வீட்டிற்கு சென்ற கௌசல்யா

காதலித்து ஜாதி மறுப்பு திருமணம் செய்த என்ஜினீயரிங் மாணவர் சங்கர் உடுமலையில் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். சங்கரின் மனைவி கவுசல்யாவும் வெட்டப்பட்டு படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
 

 


இந்நிலையில், சங்கரின் தந்தை வேலுசாமி, தம்பி விக்னேஷ் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு கவுசல்யாவை பார்க்க வந்தனர்.அப்போது கவுசல்யா தனது மாமனார் வேலுசாமியிடம் "நான் சிகிச்சை முடிந்ததும் நேராக உங்கள் வீட்டுக்கு வந்து விடுவேன்.நான் தொடர்ந்து படித்து வேலைக்கு சென்று உங்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். என்னை மருமகளாக நினைக்க வேண்டாம். உங்களுக்கு மகளாக இருந்து நன்றாக கவனித்துக் கொள்கிறேன்." என்று கண்ணீர் மல்க கூறினார். இதைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்த வேலுசாமி, கவுசல்யாவிற்கு ஆறுதல் கூறினார். பின்னர், சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வருமாறு கூறினார்.

இந்நிலையில் 16 நாள் மருத்துவ சிகிச்சைக்கு பின் குணம் அடைந்த கௌசல்யா தனது கணவர் வீட்டுக்கு செல்ல விரும்புவதாக காவல்துறை அதிகாரிகளிடம் கூறினார். இதையடுத்து சங்கரின் தம்பியும், கவுசல்யாவின் மைத்துனருமான விக்னேஷ்வரன்(20) மருத்துவமனையிலிருந்து கௌசல்யாவை அழைத்துச்சென்றார்.