வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2019 (13:00 IST)

நீதிபதி முன் மனைவியை வெட்டிய கணவன்

சென்னை  குடும்பநல நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸார் இருந்தும் இன்று மனைவியை கத்தியால் வெட்டிய கணவரால் பரபரப்பு.
சென்னை குடும்பநல நீதிமன்றத்திற்குள் நீதிபதி கலைச்செல்வன் முன் மனைவி வரலட்சுமியை கணவன் சரவணன் கத்தியால் வெட்டியதால் நீதிமன்ற வளாகத்தில் பரப்பு ஏற்பட்டது.
 
குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிமன்ற  அறையில் நீதிபதி முன் மனைவியை சரமாரியாக வெட்டினார் கணவன் சரவணன். இதனையடுத்து காயமடைந்த வரலட்சுமிக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
நீதிமன்ற வளாகத்துக்குள் அதுவும் நீதிபதியின் முன்பு இக்கொலை முயற்சி நடந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.