'என் மனைவிக்கு பயந்து சிகரெட்டை விட்டேன்'
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தான் மனைவிக்கு பயந்து புகைப்பழக்கத்தை விட்டதாக கூறியிருக்கிறார். நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பாரக் ஒபாமா, கூட்டத்தின் முடிவில் அருகில் இருந்த நபரிடம் நான் கடந்த 6 வருடங்களாக சிகரெட்டை தொடவில்லை. என் மனைவி மீது எனக்கு பயமிருப்பதால் புகைப்பழக்கத்தை முற்றிலுமாக விட்டுவிட்டதாக கூறியிருக்கிறார். ஒபாமா கூறியப்போது, பொதுவாக கடந்த 6 ஆண்டுகளாக நான் சிகரெட் பிடிப்பதில்லை. ஏனெனில் நான் எனது மனைவிக்கு பயந்து சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்றார்.
ஒபாமாவின் இந்த உரையாடலை அங்கிருந்த தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பதிவு செய்து அதை ஒளிப்பரப்பினார்.2010
ஆம் ஆண்டு டிசம்பரில் ஒபாமா கடந்த 9 மாதங்களாக சிகரெட் பிடிக்கவில்லை என அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார். புகைப்பழக்கம் உடைய ஒபாமாவை பற்றி நிறைய விமர்சனம் எழுந்ததும், தனது கணவர் 2 மகள்கள் முன்பு சிகரெட்டை தொடுவது கூட இல்லை என அவரது மனைவி மிசேல் ஒபாமா தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.