வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 17 ஜனவரி 2020 (15:24 IST)

'பாரத ரத்னா' விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா காந்தி - சுப்ரீம் கோர்ட்

மஹாத்மா காந்தி நம் நாட்டின் தேசத் தந்தை என்பதால் அவர் பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் என  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் சார்பில் நாட்டில் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது பாரத் ரத்னா ஆகும். இந்த விருதை மஹாத்மா காந்திக்கு வழங்க வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மஹாத்மா காந்தி தேசத்தின் தந்தை. அவர் மக்களால் மதிக்கப்படுகிறார்.அவர் பாரத் ரத்னா விருதைவிட உயர்ந்தவர்.மனுதாரர் அரசை நாடலாம் என தெரிவித்து இந்த மனுவை தள்ளுபயி  செய்தனார்