1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 8 ஜூன் 2019 (13:49 IST)

மேற்கு வங்காளத்தில் பயங்கர தீ விபத்து : மக்கள் அதிர்ச்சி

மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ரசாயன குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடிவருகிறார்கள்.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் கொல்கத்தா நகரின் ஜெகன்னாத் காட் பகுதி அருகே ரசாயன குடோன் ஒன்று உள்ளது. இன்று காலை திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தகவலை அறிந்துகொண்டு தீ அணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரமாக தீயை அணைக்க போராடிக்ககொண்டிருக்கின்றனர்.

இதனை குறித்து தீயணைப்பு வீரர் தோப்தானு என்பவர் கட்டிடத்தின் உள்ளே நடுப்பகுதியில் உள்ள மேற்கூரை தீயினால் எரிந்து விழுந்துவிட்டது எனவும், கட்டிடத்தின் உள்ளே எங்களால் போகமுடியவில்லை என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தீயணைப்பு வீரர் தோப்தானு தீயணைப்பு படையினரில் வீரர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.