வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (14:47 IST)

மாமியாரை அலேக்காக தூக்கிய மருமகள் – வாக்குச்சாவடு ருசிகரம் !

சென்னை பூந்தமல்லியில் நடக்க முடியாத தனது மாமியாரை அழைத்துச் செல்ல வீல் சேர் இல்லாததால் மருமகள் அவரைத் தூக்கிச் சென்ற சம்பவம் அனைவரையும் ஈர்த்தது.

தமிழகமெங்கும் நேற்று, முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் அமைதியான் முறையில் நடந்து முடிந்தது. சென்னை பூந்தமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட சென்னீர்குப்பம் எனும் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற  87 வயது பாட்டி தேர்தலில் வாக்களிக்க ஆசைப்பட்டுள்ளார். கண் பார்வை குறைபாட்டாலும் நடைப் பிரச்சனையாலும் பாதிக்கபப்ட்ட இவரை எப்படி கொண்டு செல்வது என உறவினர்கள் தயங்கியுள்ளனர்.

தனது ஆசையை மருமகள் பாண்டியம்மாளிடம் பாட்டி தெரிவிக்க வாக்குச்சாவடிக்கு அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அந்த வாக்குச்சாவடியில் சக்கர நாற்காலி வசதி இல்லாததால் வாக்குச்சாவடிக்கு வெளியே இருந்து  அவரைத் தூக்கிச் தனது கைகளில் தூக்கிச் சென்று வாக்களிக்க வைத்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.