1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 11 மே 2018 (19:15 IST)

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 34 போலீசார் பலி

ஆப்கானிஸ்தானில் உள்ள பராக் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 34 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உச்சத்தில் உள்ளது. இவர்கள் அங்குள்ள பகுதிகள் சிலவற்றை ஆக்கிரமித்து தங்களுக்கு என்றே ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்த தீவிரவாதிகள் நேற்றிரவு பராக் மாகாணத்தில் அருகில் உள்ள பாலபுலுக் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்நிலையத்தின் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 23 போலீசார் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதன்பின்னர் பயங்கரவாதிகள் பராக் நகருக்குள் புகுந்து 11 போலீசாரை கொன்று அவர்களிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றி சென்றுள்ளனர்.

 
 
தலிபான்கள் நடத்திய இந்த தாக்குதலில் 34 போலீசார் உயிரிழந்துள்ளதாகவும், மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.