வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 26 ஜூலை 2017 (06:13 IST)

சர்ச்சைக்குரிய பகுதியில் அதிநவீன தியேட்டர்: சீனாவின் நடவடிக்கையால் வியட்நாம் அதிருப்தி

சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லைப்பிரச்சனை குறித்து மோதல் போக்குடன் நடந்து கொண்டு வருகிறது. இந்தியாவில் சிக்கிம் எல்லையில் சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வரும் நிலையில் வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடிவரும் தென் சீனக் கடல் பகுதியில் திடீரென சினிமா தியேட்டர் ஒன்றை சீனா திறந்துள்ளது. இதனால் வியட்நாம், தைவான் நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன. 



 
 
தென்சீனக்கடல் பகுதியில் விமானப்படை தளம் அமைக்க எங்களுக்கு உரிமை உண்டு என்று சீனா ஏற்கனவே அடாவடி செய்து வருகிறது. தென் சீனக்கடல் பகுதியில் உரிமை கொண்டாடுவதற்கு சீனாவிடம் வரலாற்றுபூர்வ ஆதாரம் ஏதுமில்லை என நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் அளித்த போதிலும், அந்த தீர்ப்புக்கு கட்டுப்படாமல் சீனாவின் நடவடிக்கை இருந்து வருகிறது.
 
இந்த நிலையில்  தென் சீனக் கடல் பகுதியில் சில ஆயிரம் மக்கள்கூட வசிக்காத ஒரு தீவில் சீன அரசு சமீபத்தில் சினிமா தியேட்டர் ஒன்றை திறந்துள்ளது.  சாந்தா என்லாங் சினிமா என பெயரிடப்பட்டுள்ள இந்த தியேட்டரில் அதிநவீன டிஜிட்டல் ஒலி அமைப்புடன், 3-டி திரையில் 4-டி புரொஜெக்டர்கள் மூலம் படம் காட்டப்படுகிறது. இந்த தியேட்டருக்கு உள்ளூர்வாசிகள் பெரும் ஆதரவு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.