வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (13:25 IST)

பிரமாண்ட முறையில் தயாராகும் நேரு ஸ்டேடியம்

‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக, பிரமாண்டமான முறையில் நேரு ஸ்டேடியம் தயாராகி வருகிறது.


 

 
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெர்சல்’. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. இந்த விழாவைப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ள தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம், ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையும் கொண்டாட இருக்கிறது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம், இந்த விழாவுக்காக பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மானுடன் இதுவரை பணிபுரிந்தவர்கள், சினிமா உலகின் ஜாம்பவான்கள் என அனைவரும் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் மட்டுமல்லாது, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான முக்கியமான பாடல்களும் விழாவில் பாடப்பட இருக்கின்றன.