வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 17 டிசம்பர் 2016 (16:59 IST)

பார்ட் 1-ல் இறப்பு, பார்ட் 2-வில் நடிப்பு: தனுஷ் படத்தில் குழப்பம்!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வி.ஐ.பி -2 படத்தில் சரண்யா பொண்வண்ணன் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. 


 
 
’வேலை இல்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். தனுஷ் கதாநாயகனாகவும், அமலா பால் கதாநாயகியாகவும் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. 
 
வி.ஐ.பி-2 துவக்க விழா புகைப்படங்களில் படக்குழுவினரோடு சரண்யா பொன்வண்ணனும் இருந்தார். ஆனால் சரண்யா பொன்வண்ணன், வேலை இல்லா பட்டாதாரி படத்தில் இறந்துவிடுவது போல காட்சியமைப்பு இருக்கும். எனவே இந்த படத்தில் அவர் நடிக்கிறாரா? இல்லையா? என்பது சந்தேகமாக இருந்தது. 
 
இந்நிலையில் வி.ஐ.பி -2 படத்தில் தான் நடிப்பதாகவும், ஆனால் அந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் என்ன? என்பது சஸ்பென்ஸ் எனவும் சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.