வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (17:19 IST)

தமிழ் பட இயக்குனர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாது: சீறும் ராதிகா ஆப்தே!!

ரஜினியுடன் கபாலி படத்தில் ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தமிழ் பட இயக்குனர்கள் பற்றி பேசியுள்ளார்.


 
 
ராதிகா ஆப்தே கூறியதாவது, தென் இந்திய சினிமாவில் ஹீரோக்களுக்குத் தான் மதிப்பு. நடிகைகளுக்கு அவ்வளவு மதிப்பு இல்லை. நடிகர்களுக்கு நட்சத்திர ஓட்டல்களில் ரூம் போட்டு கொடுப்பார்கள். நடிகைகளுக்கு சாதாரண ஓட்டல் ரூம் தான்.
 
நடிகர்கள் எவ்வளவு தாமதமாக வந்தாலும் எதுவும் கேட்க மாட்டார்கள். ஆனால் நடிகைகள் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அங்கு இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இது மாதிரி நிறைய வி‌ஷயங்களில் நான் பாதிப்பு அடைந்திருக்கிறேன்.
 
கபாலி படம் தவிர வேறு எந்த படத்திலும் தமிழ்பட இயக்குனர்கள் எனக்கு மரியாதை தரவில்லை. அதற்காக எல்லோரையும் குற்றம் சாட்டவில்லை என தெரிவித்தார்.