வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2017 (14:50 IST)

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி

தமிழில் ரீ எண்ட்ரியாகியுள்ள அரவிந்த் சாமி, அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

 
 
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘முடிஞ்சா இவனைப்புடி’. கடந்த வருடம் ரிலீஸான இந்தப் படத்தில், சுதீப், நித்யா மேனன் நடித்திருந்தனர். கன்னடத்திலும் ரிலீஸான இந்தப் படம், வெற்றி பெறவில்லை. அதற்கு  முன்னர் ரஜினி நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘லிங்கா’ படமும் வெற்றி பெறவில்லை.
 
எனவே, எப்படியாவது வெற்றிப் படத்தைக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். எனவே, அரவிந்த் சாமியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். அரவிந்த் சாமியிடம் கதையைச் சொல்லி, ஓகேவும்  வாங்கிவிட்டார்.
 
தற்போது பாலையா, நயன்தாரா நடிப்பில் தெலுங்குப் படத்தை இயக்கிவரும் கே.எஸ்.ரவிகுமார், அந்தப் படம் முடிந்ததும்  அரவிந்த் சாமி படத்தைத் தொடங்குகிறார்.