வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

கேழ்வரகு புட்டு செய்ய தெரியுமா...!

கேழ்வரகு புட்டு இரண்டு வகைகளில் செய்வார்கள். ஒன்று வேர்க்கடலை, எள், வெல்லம் சேர்த்தது. மற்றொன்று தேங்காய்ப்பூ,  சர்க்கரை சேர்த்த‌து.

 
தேவையானவை:
 
கேழ்வரகு மாவு - ஒரு கப்
சர்க்கரை - தேவைக்கு
தேங்காய்ப்பூ - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
* கேழ்வரகு மாவில் துளி உப்பு போட்டுக் கலந்து (உப்பு சேர்ப்பது சுவைக்காகத்தான்) தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு இரண்டு கைகளாலும் மாவைப் பிசறினார்போல் கிளறவும்.
 
* தண்ணீரைச் சேக்கும்போது கொஞ்சம் கவனமாகச் சேர்க்க வேண்டும். அதிகமாகிவிட்டால் மாவு புட்டுபோல் இல்லாமல் குழைந்துவிடும். தண்ணீர் குறைவாக இருந்தால் புட்டு வேகாமல் வெண்மையாக இருக்கும்.
 
* பிசைந்த மாவைக் மாவைக் கையில் எடுத்து பிடிகொழுக்கட்டைக்குப் பிடிப்பதுபோல் பிடித்தால் பிடிக்க வரவேண்டும். பிறகு  அதையே உதிர்த்தால் உதிரவும் வேண்டும்.இந்தப் பக்குவத்தில் மாவைப் பிசறிய பிறகு ஒரு 10 நிமிடம் மூடி வைக்கவும்.
 
* பிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும். அதன்பிறகு இட்லி அவிப்பதுபோல் இட்லித் தட்டில் ஈரத்துணி போட்டு  மாவை வேக வைத்து எடுக்கவும்.
 
* ஆவி வெந்து வாசனை வந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி, உதிர்த்துவிட்டு தேங்காய்ப்பூ ,சர்க்கரை, ஏலத்தூள் சேர்த்துக்  கிளறிவிடவும். இப்போது சத்தான, சுவையான, இனிப்பான‌ கேழ்வரகு புட்டு சாப்பிடத் தயார்.