வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 14 மே 2017 (23:53 IST)

வாழ்வா சாவா முக்கிய போட்டியில் பஞ்சாப் பரிதாபம்: அசத்திய புனே

ஐபிஎல் போட்டியின் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் புனே அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்தும் பஞ்சாப் அணி பரிதாபமாக தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.



 


இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி படுமோசமாக பேட்டிங் செய்து 15.2 ஓவர்களில் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களை இழந்தது. இந்த அணியின் எட்டு பேட்ஸ்மேன்கள் பூஜ்யம் மற்றும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

இதனால் வெறுஇம் 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே 12 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 78 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றதோடு இரண்டாவது இடத்தையும் பிடித்தது.