வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2017 (06:31 IST)

சென்னை போலீசார் இனி 6 மணிக்கே டூட்டிக்கு வரவேண்டும்: கமிஷனரின் புதிய உத்தரவு

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக கரண் சின்ஹா சமீபத்தில் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில் தற்போதைய அரசியல் குழப்பநிலை சூழ்நிலை காரணமாக சென்னையில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு கூடுதல் நேரமாக காலை 6 மணியிலிருந்தே அவர்கள் பணியாற்ற வேண்டும் என்று புதிய உத்தரவு ஒன்றை ஆணையர் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவால் காவல்துறையினர் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.



 


நேற்று இரவு ஜெயகுமார் தலைமையில் அதிமுக அம்மா அணி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும், தினகரன் தலைமையில் ஒரு அணியும் மாறி மாறி விடிய விடிய ஆலோசனை செய்தனர். எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் பாதுகாப்பை சென்னையில் பலப்படுத்துவது மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது.

இதனை கணக்கில் கொண்டே சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்ஹா சென்னையில் பணியாற்றும் காவலர்கள் அனைவரும் காலை 6 மணிக்கு பணிக்கு வருமாறு உத்தரவிட்டுயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.