செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (11:29 IST)

தர்மபுரி அருகே அரசு பேருந்தும் மணல் லாரியும் மோதி விபத்து : 6 பேர் பலி

தர்மபுரி அருகே அரசு பேருந்தும் மணல் லாரியும் மோதி விபத்து : 6 பேர் பலி

தர்மபுரி அருகே உள்ள தொப்புர் எனும் இடத்தில் இன்று காலை ஒரு அரசு பேருந்தும், ஒரு மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பெண்கள் உடபட 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 


 

 
மற்றும் ஏரளமானோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


 

 
அங்கு அரசு மருத்துவர்கள் கூடியுள்ளனர். காயமடைந்த சிலருக்கு அவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த இடத்தில் சிக்னல் ஏதும் இல்லாததால், அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாக அப்பகுதி மக்கள் குறை கூறி வருகின்றனர்.