வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2016 (12:02 IST)

மாயமான மதன் தாயார் கண்ணீர் மல்க கூறிய குற்றச்சாட்டு!

திரைப்படத் தயாரிப்பாளர் மதன் மாயமாகி கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது.


 


இன்னும், அவரை கண்டுபிடித்தபாடில்லை. இந்நிலையில், மதன் காணாமல் போனதற்கு எஸ்.ஆர்.எம். குழுத் தலைவர் பச்சமுத்துவின் மகன், ரவி பச்சமுத்து தான் காரணம் என்று, மதனின் தாயார் தங்கம் கண்ணீர் மல்க பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். மேலும், மதன் காணாமல் போன விவகாரத்தில் ரவி பச்சமுத்துவை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோன்று, பச்சமுத்து மற்றும் மதன் உடனான உறவை பொறுத்துக் கொள்ளாத முடியாமல், ரவி பச்சமுத்து ஆதங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 102 மருத்துவ சீட்டுகளுக்கான பணத்தை எஸ்.ஆர்.எம். குழுமத்திடம் ஒப்படைத்துவிட்டதாக மதன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.