வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

செட்டிநாடு இறால் குழம்பு

செட்டிநாடு இறால் குழம்பு

தேவையான பொருட்கள்:
 
இறால் - 1/2 கிலோ
வெங்காயம் - 4 நறுக்கியது
தக்காளி - 2 நறுக்கியது
இஞ்சி, பூண்டு விழுது - 1டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
தனியாத் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி  - தேவையான அளவு
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் 4
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
பட்டை - 2
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4 
ஏலக்காய் - 3
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்


 
 
செய்முறை:
 
முதலில் ஒரு வானலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
 
பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொடியையும், அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி, உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் குழம்பை கொதிக்க விட வேண்டும்.

குழம்பில் இருந்து எண்ணெய் பிரியும்போது, அதில் இறாலை சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால், செட்டிநாடு இறால் குழம்பு தயார். மேலே கொத்தமல்லி தூவி கலந்துவிட்டால் வாசனையான இறால் குழம்பு தயார்.