செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (03:47 IST)

மும்பையில், தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை நூல் வெளியீடு

ஓவியர் புகழேந்தி எழுதிய தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை என்ற நூல் வெளியீ்ட்டு விழா மும்பையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
 

 
மும்பை முத்தமிழ் மன்றம் சார்பில், செம்பூர் காமராசர் சாலை, காமராசர் அரங்கில், மாவீரன் திலீபன் நினைவேந்தல் மற்றும், ஓவியர் புகழேந்தி எழுதிய தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை என்ற நூல் வெளியீ்ட்டு விழா  நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சிக்கு சுந்தர் சிவலிங்கம் தலைமையேற்றார். அ. கணேசன் உறுதிமொழி ஏற்று, தொடக்கவுரையாற்றினார். இதனையடுத்து, தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை நூல் வெளியிடப்பட்டது. மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன்  தமிழ்ச்செல்வன் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். நவிமும்பை தமிழ்ச்சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் முதல் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழா நிறைவில், நூலாசிரியர் ஓவியர் கு. புகழேந்தி ஏற்புரையாற்றினார்.
 
இந்த நிகழ்ச்சியில், மும்பை வாழ் தமிழ் மக்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.