வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (16:18 IST)

ஜனநாயகம் இந்துக்களால் பாதுகாப்பாக இருக்கிறது: பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

ஜனநாயகம் இந்துக்களால் பாதுகாப்பாக இருக்கிறது: பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!

இந்துக்கள் அதிகமாக இருக்கும் போது தான் இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கும் என பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.


 
 
பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் இந்து மற்றும் மற்ற மதத்தினரை ஒப்பிட்டு அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் பேசுவது வழக்கம். இந்நிலையில் தற்போது பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 54 மாவட்டங்களில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
 
இங்கு இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. நாட்டின் பெரும்பான்மை மக்கள்தொகையாக இந்துக்கள் இருக்கும்போது ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்கிறது. இதில் மாற்றம் வரும்பொழுது நாட்டின் வளர்ச்சி, ஜனநாயகம் மற்றும் சமூக இணக்கம் போன்றவை மோசமான நிலைக்கு செல்கின்றன.
 
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த பின்னர் பாகிஸ்தான் மக்கள்தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதேநேரத்தில் இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.