வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (12:27 IST)

அந்த கோவிலில் பெண்கள் நுழைந்ததால் கற்பழிப்புகள் அதிகரிக்கும்: பிரபல சாமியார் கருத்து

அந்த கோவிலில் பெண்கள் நுழைந்ததால் கற்பழிப்புகள் அதிகரிக்கும்: பிரபல சாமியார் கருத்து

சனி பகவான் கோவிலில் பெண்கள் நுழைந்ததால் கற்பழிப்புகள் அதிகரிக்கும் என்று சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் அஹமத் நகரில் புகழ்பெற்ற சனி சிங்னாபூர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உள்ளே திறந்தவெளி பகுதியில் அமைந்துள்ள கருவறையில் பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
சுமார் 400 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த தடைக்கு எதிராக,  பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராடி வருகின்றனர்.
 
இது குறித்து பூமாதா படை அமைப்பினர் மகாராஷ்டிரா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சனி பகவான் கோவில் கருவறையில் நுழைய பெண்களுக்கு அனுமதி வழங்கி கடந்த 1 அம் தேதி தீர்ப்பளித்தது.
 
இந்த தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்த பெண்கள் சனி பகவான் கோவில் கருவறையில் சென்று வழிபாடு நடத்தினர்.
 
அத்துடன், இந்த கோவில் கருவறைக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது.
 
பெண்கள் சனிபகவான் கோயில் கருவறைக்குச் சென்று வழிபடுவதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
 
அதன்படி, துவாரகா - சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறியதாவது:-
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சனி பகவான் கோவில் கருவறைக்குள் நுழைந்தது குறித்து பெண்கள் வெற்றிக்களிப்பில் மிதக்க வேண்டாம்.
 
இந்த செயலை செய்ததற்காக தம்பட்டம் அடித்துக்கொள்வதை அவர்கள் நிறுத்த வேண்டும். சனி வழிபாடு பெண்களுக்கு நல்லதல்ல.
 
சனி பகவானை வழிபடுவது அவர்களுக்கு துரதிர்ஷ்டத்தையே கொண்டு வரும். சனி பகவான் கோவில் கருவறைக்குள் நுழைந்ததால் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு போன்ற குற்றங்கள் அதிகரிக்கும்.
 
சனி சிங்னாபூர் கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைந்திருக்கக்கூடாது. அதற்கு பதிலாக ஆண்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை பெண்கள் நிறுத்தியிருக்க வேண்டும். 
 
ஏனெனில் இந்த பொருட்களால் தான் கற்பழிப்பு போன்ற குற்றங்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு வரூபானந்த் சரஸ்வதி கூறினார்.