பாம்பு கடித்த தாயிடம் தாய்பால் அருந்திய குழந்தை பரிதாப பலி
பாம்பு கடித்த தாயிடம் தாய்பால் அருந்திய குழந்தை பரிதாப பலி
அம்மாவை பாம்பு கடித்த நிலையில், அவரிடம் பால் குடித்த குழந்தை பரிதாபமாக பலியானது.
ஆந்திராவில், அனந்தபூர் மாவட்டம், கொஜ்ஜபல்லி கிராமத்தை சேர்ந்த சந்திரகலா, தனது மூன்று வயது மகன் வம்சியுடன் தங்களது கிராமத்தில் விவசாய வேலைக்கு மற்ற பெண்களுடன் சென்றார். வேலை முடிந்து வழக்கம் போல் அனைவரும் வீடு திரும்பய நிலையில், அவரும் வீடு திரும்பினார். வழியில் அவரை பாம்பு கடிக்கவே அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதை அறியாத குழந்தை அந்த தாயிடம் தாய்பால் அருந்தியது. சிறிது நேரத்தில் அந்த குழந்தையும் மயக்கம் அடைந்தது.
இதை அந்த வழியே வந்த சிலர் பார்த்து உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அட்மிட் சேர்த்தனர். அவர்கல் இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால், குழந்தையின் தாய் சந்திரகலாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.