செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (11:24 IST)

தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள்

உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி ஒருவரை மர்ம நபர்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
 
பாதிக்கப்பட்ட குழந்தை தனது பெற்றோர்களுடன் வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள், குழந்தையின் பெற்றோர்கள் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்து சிறுமியின் வாயை பொத்தி கடத்தியுள்ளனர்.
 
இதனையடுத்து அங்கு மழை பெய்ததால் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர்கள் எழுந்து வீட்டிற்குள் செல்ல முயன்ற போது சிறுமியை காணவில்லை என்பதை உணர்ந்தனர். இதனையடுத்து பல இடங்களில் தேடிய சிறுமியை நிர்வாணமாக மயக்க நிலையில் கண்டெடுத்தனர்.
 
பின்னர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹபூர் மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.