வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

விரதம் இருக்கும் நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என சொல்வது ஏன்?

விரதம் இருக்கும் நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என சொல்வது ஏன்?

விரத நாட்களிலும் நோன்பு நாட்களிலும் எண்ணெய் பூசி குளிக்கலாகாது. எண்ணெய் பூசிக்குளிப்பது முக்கியமாக கருதும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கை சொல்வது மூட நம்பிக்கை என்று கூறிவந்தனர். ஆனால் இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது வெளிபடுத்தப்பட்டுள்ளது.


 
 
சனி கிரகத்தின் சக்தியில் இருந்து உருவானதாக கருதபடும் எண்ணெய் தலைக்கு சுற்றிலும் ஓர் புகை வளையம் உருவாக்குகிறது. இவ்வளையம் இருப்பதால் கிரங்களில் இருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய இயலாமல் போகின்றது.
 
விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் பூமிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம்.
 
இவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணெய் தடையாக இருப்பதால் தான் விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு விதி விலக்கு ஏற்பட்டுள்ளது.