வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Bala
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2016 (12:59 IST)

ரீஃபைண்ட் ஆயில் இது ஒரு மெல்லக் கொல்லும் நஞ்சு…

நாமெல்லாம் நினைக்கிறது போல ரீஃபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மட்டும் இல்லை. சுத்தமா உயிர சத்துகளே இல்லாத எண்ணெய் ரீபண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெயில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.


 

பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் அகற்றி நீயூட்டலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள். பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபபோகித்து கொண்டு இருக்கிறார்கள்.உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது. எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.

நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். கடந்த 60, 70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட ஆயில்.யோசிச்சு பாருங்க இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி நம் ஆரோக்கியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்தி கொள்கிறோம்.

அப்படியென்றால் எந்த எண்ணெய்யை பயன்படுத்துவது என்றால் ரீஃபைண்ட் செய்யாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வாங்கி பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்யில் எல்லாம் கொழுப்புசத்து அதிகமாக இருப்பதாக கூறவார்கள். அது மட்டும் இல்லாமல் ஹார்ட் அட்டாக், ஆ.ட வரும், அதிகமாக வெயிட் போடும் என்று சொல்வார்கள். இப்ப ரீஃபண்டாயில் தானே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். தற்போது இந்த நோய்கள் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக தெரியவில்லை. முன்பு 60, 70 வயதுகளில் வந்த ஹார்ட் அட்டாக் எல்லாம் தற்போது 25, 30 வயதுகளிலேயே வருகிறது.

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய எண்ணெயையும் நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும். மணமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான். இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுஉப்புகள், நார்ச்சத்துக்கள், குளோரோபில், கால்சியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் இ போன்றவை நமக்கு கிடைத்து வந்தன. இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று, எலும்பு தேய்மானத்தை தடுத்தன.

இந்த எண்ணெய்யை குளியலுக்கு மட்டுமின்றி மசாஜ் செய்வதற்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர். அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்ற சொல்வதற்கு பதிலாக நல்ல எண்ணெய் என்று சொன்னார்கள். வெளிநாட்டில்கூட இதை ணன்ங்ங்ய் ர்ச் ஞண்ப்  என்று அழைக்கிறார்கள்.

ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துகள் எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை. புதுசா எதையோ கண்டுபிடுச்சு அதை குறைந்த விலை தான் சொல்வார்கள்யில் விற்று நம்மை சோதனை எலிகளை போல் பயன்படுத்துகிறார்கள். நம் முன்னோர்கள் காலகாலமாக உபயோக படுத்திய உணவு முறையை பின்பற்றி அவர்கள் போலவே 80, 90 வயது வரை ஆரோக்கியமாக வாழ்வோம். இனிமேலும் ஏமாறாமல் அது நம் வருங்காலத்தையே கேள்வி குறியாக்கி விடும். எதை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருப்போம்.