1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (20:10 IST)

மாதச் சம்பளத்தை எடுக்க முடியாமல் திணறும் ஊழியர்களின் நிலை எப்படி இருக்கும்? - [வீடியோ]

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளுக்கு பதில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.


 

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், சாதாரண ஏழை, எளிய ஜனங்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு பெரிதும் சிரமப்பட்டனர்.

இதற்கிடையில், நாளைன்று ஏ.டி.எம். இயந்திரத்தில் 2ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்றும், வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் வாரத்திற்கு ரூ.24,000 வரை எடுக்கவும் அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு இருந்தது. பிறகு அதை தளர்த்தியது.

இந்நிலையில், வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் எடுக்க முடியாமல் அவதிப்படும் வாடிக்கையாளர்களின் நிலை குறித்த நகைச்சுவை வீடியோ இணையத்தளங்களில் பரவி வருகிறது.

வீடியோ கீழே: